மூன்று லட்சம் அப்பாவி தமிழர்களுக்கு நம்பிக்கையூட்ட மகிந்த இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சாட்டு
இலங்கையில் முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' ஏடு குற்றம் சாட்டியுள்ளது.
Posted on 03 Jul 2009 by Admin
வவுனியா அகதி முகாம்களில் அதிகரிக்கும் நோயாளர்கள்: இராணுவக் கெடுபிடிகளால் சிகிச்சை பெறமுடியாது மக்கள் திண்டாட்டம்
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் அங்குள்ள சுகாதாரச் சீர்கேடு மற்றும் காரணங்களினால் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்ற போதிலும் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted on 03 Jul 2009 by Admin
இடம்பெயர்ந்தோர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அகதி முகாம்களில் இருந்தே அடுத்த பிரபாகரன் உருவாகுவார்: ஜே.வி.பி.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அகதி முகாம்களில் இருந்தே அடுத்த பிரபாகரன் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு அந்நாட்டின் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
Posted on 03 Jul 2009 by Admin
சிறிலங்காவின் இராணுவத் தளபதி யாழுக்கு பயணம்: பாதுகாப்பு நிலை பற்றி ஆராய்வு
சிறிலங்காவின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்கோ யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார். நேற்று வியாழக்கிழமையே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Posted on 03 Jul 2009 by Admin
அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு த.தே.கூ. ஆதரவளிக்கும்: மகிந்த கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு
வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் இன்று கூட்டப்பட்ட அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Posted on 03 Jul 2009 by Admin
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் தான் தூண்களாகத் தாங்கி நிற்கவேண்டும்: உருத்திரகுமாரன்
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் அமைப்புக்கள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்கவேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
Posted on 03 Jul 2009 by Admin
சீனா எமது வாழ்நாள் நண்பன்: சிறிலங்கா
சீனாவே சிறிலங்காவின் வாழ்நாள் நண்பன். எனவேதான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நான் இங்கு வந்துள்ளேன் என சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
Posted on 03 Jul 2009 by Admin
வடபகுதி முகாம்களின் நிலை மிக மோசம், பாலியலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள்: அவுஸ்திரேலிய நாளேடு தகவல்
வடபகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் அகதிகளின் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான நாளேடான 'த அவுஸ்ரேலியன்', அங்குள்ள பெண்கள் அகதிகளுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் பலாத்தகாரமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Posted on 03 Jul 2009 by Admin
வலி சுமந்த தமிழ் இனத்துக்கு இந்தியா வழி அமைக்குமா?
புதிய பரிணாமத்துடன் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பங்காளியாகி இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இன்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய கட்டாய பாடமாகவும் தேவையாகவும் ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவு என்ற கரு வியாபித்திருக்கின்றது.
Posted on 01 Jul 2009 by Admin
செட்டிகுளம் தடுப்பு முகாமில் சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு: இரு அப்பாவித் தமிழர்கள் கொலை
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கான தடுப்பு முகாமில் சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இரண்டுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted on 01 Jul 2009 by Admin
<< Previous 1 2 Next >> |