 |
பக்கம் 2
|
 |
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் துளிர்த்தவை இவை
- இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்து வாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி.
- பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; கோழைத்தனத்தின் தோழன்; உறுதிக்குகு எதிரி. மனித பயங்களூக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரண பயத்தை கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்றுவிடுகிறான்; அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.
- நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும், வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது.
- மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.
- நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே; செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்
- ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்; ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம்.
- நாம் அரசியல்வாதிகளல்லர்; நாம் புரட்சிவாதிகள்
- நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்; அதற்கு எமது வீரர்களின்இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
- சமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கெளரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.
- விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல; விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள்தான் மக்கள்; மக்கள்தான் புலிகள்.
- எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள்; கெளரவிக்கப்படவேண்டியவர்கள். தேசியப்போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல; அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் - அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்.
- அரசியல் என்பது மக்கள்மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பதுது எமது மக்களுக்ச் சேவை புரியும் பணி; மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு.
- குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்நத தமிழனைத் தலைநிமிர்த்தி - தன்மானத்துடன் - வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்
|
 |
 |